வேன்-லாரி மோதல்: 2 இளம் பக்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil
மேல்மருவத்தூர்:
மேல்மருவத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 2 இளம் பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரைச் சேர்ந்த ஏழு பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திகோவிலுக்கு வேன் மூலம் வந்தனர்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் அதே வேனில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அச்சரப்பாக்கம்-தொழுப்பேடு மேம்பாலம் அருகே எதிரே வந்த ஒரு லாரி மீது வேன் பயங்கரமாகமோதியது.
இவ்விபத்தில் வேனிலிருந்த சுதா (16) மற்றும் மாலா (16) ஆகிய இரண்டு பெண்களும் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரியின் டிரைவரைத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications