புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் விஜ் பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய ராணுவத்தின் தளபதி ஜெனரல் செளந்தரராஜன் பத்மனாபன் இன்று ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து புதியதளபதியாக ஜெனரல் நிர்மல் சந்தர் விஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பொறுப்பை விஜ்ஜிடம் ஒப்படைத்தார்பத்மனாபன்.
கார்கில் போரில் முக்கியப் பங்காற்றிய ஜெனரல் விஜ் இந்திய ராணுவத்தின் 21வது தளபதி என்பதுகுறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அவர் முறைப்படி ராணுவ தளபதியாகப் பதவி ஏற்கிறார்.
முன்னதாக, ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெறும் பத்மனாபனுக்கு சிறப்பான பிரியாவிடைகொடுக்கப்பட்டது.
நாட்டுக்கான தங்கள் இன்னுயிர்களை கொடுத்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார் பத்மனாபன்.












Click it and Unblock the Notifications