வைகோ கைதை எதிர்த்து கையெழுத்திட மறுப்பா?- பா.ஜ.க. விளக்கம்
சென்னை:
வைகோ கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாங்கள் நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் தொடர்பாக மதிமுகவினர்இதுவரை எங்களை அணுகவில்லை என்று பா.ஜ.கவின் மாநிலப் பொதுச் செயலாளர் எச். ராஜா கூறினார்.
வைகோ கைதை எதிர்த்து மதிமுக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறது. இதற்கான படிவத்தில்ராஜா கையெழுத்திட மறுத்து விட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
இதையடுத்து மதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் மதிமுகவின் இந்தக் குற்றச்சாட்டை ராஜா வன்மையாக மறுத்தார். இது தொடர்பாக ஒரு தமிழ்பத்திரிக்கை நிருபரிடம் அவர் கூறுகையில்,
இந்தக் கையெழுத்து இயக்கப் படிவத்தில் பா.ஜ.க. கையெழுத்திடுமா என்று சமீபத்தில் நிருபர்கள் கேட்டனர்.அந்தப் படிவத்தில் உள்ள வாசகங்களைப் படித்த பின்னரே முடிவு செய்யப்படும் என்றுதான் நான் பதில் கூறினேன்.
பொடா சட்டத்திற்கு எதிராகவோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவோ அந்தப் படிவத்தில் வாசகங்கள்எழுதப்பட்டிருந்தால் நாங்கள் எப்படிக் கையெழுத்திட முடியும்?
ஆனால் என்னிடமோ, பா.ஜ.கவின் மூத்த தலைவர்களிடமோ கையெழுத்து கோரி மதிமுகவினர் வரவேயில்லை.
வைகோ விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் எல்லாம் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும்இல்லை என்றார் ராஜா.
இந்நிலையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கப் படிவத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன்நேற்று கையெழுத்துப் போட்டார். இப்படிவத்தில் திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் இளைஞரணிச்செயலாளர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோர் ஏற்கனவேகையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->