மாநகராட்சி, நகராட்சிகளுக்கு ரூ.14.81 கோடியில் கம்ப்யூட்டர்கள்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களுக்காக கம்ப்யூட்டர்கள் வாங்கரூ.14.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள நான்கு மாநகராட்சிகள், 80 நகராட்சிகள் மற்றும் 493 பேரூராட்சிகளுக்காக கம்ப்யூட்டர்கள்வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.14.81 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்-2ன் கீழ் இந்த கம்ப்யூட்டர்கள் வாங்கப்படுகின்றன. "எல்காட்" மூலம் இந்தக்கம்ப்யூட்டர்கள் வாங்கப்படும்.
இதன் மூலம் தரமான, விரைவான சேவையை வழங்க முடியும் என்று ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications