For Quick Alerts
For Daily Alerts
Just In
தருமபுரி அருகே வேன்-பஸ் பயங்கர மோதல்: 2 ஐயப்ப பக்தர்கள் பலி
தருமபுரி:
தருமபுரி அருகே வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த ஆந்திராவைச்சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் சிலர் வேனில் சென்று கொண்டிருந்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் "கிரிவலம்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வேறு சிலர்ஒரு பஸ்சில் தருமபுரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை தருமபுரி அருகே இந்த வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்தப் பயங்கர விபத்தில் வேனில் பயணம் செய்த இரண்டு ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
இவ்விபத்தில் நான்கு பெண்கள் உள்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->
Story first published: Tuesday, December 31, 2002, 5:30 [IST]