For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிக்குள் வந்த 12 அடி நீள மலைப் பாம்பு: மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலம் அருகே ஒரு பள்ளி வகுப்புக்குள் 12 அடி நீள மலைப் பாம்பு புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த மாணவ,மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சேலம் மாவட்டம் கிச்சிலிப்பாளையம் பகுதியில் உருதுப் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு வழக்கம்போல் வகுப்புகள்நடந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் ஒரு வகுப்பறைக்குள் திடீரென்று 12 அடி நீள மலைப் பாம்பு ஒன்று புகுந்தது.

மலைப் பாம்பைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அவ்வகுப்பில் இருந்த ஆசிரியரும், மாணவ, மாணவிகளும் அலறிஅடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சத்தம் கேட்டு மற்ற வகுப்புகளில் உட்கார்ந்திருந்த ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கூட தங்கள்வகுப்பறைகளை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

வனத்துறையினரும் விரைந்து வந்து மலைப் பாம்பை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அந்தப் பாம்பு 50 கிலோஎடையுடன் இருந்தது.

பின்னர் பொதுமக்கள் பார்த்து மகிழ்வதற்கு வசதியாக அந்த மலைப் பாம்பு சேலம் உயிரியல் பூங்காவிற்குக்கொண்டு செல்லப்பட்டது. அப்பகுதி மக்கள் அங்கு வந்து மலைப் பாம்பைக் கண்டு கொண்டிருக்கின்றனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X