திண்டுக்கல் அருகே பஸ்-கார் பயங்கர மோதல்: ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். அவர் தன் குடும்பத்தினருடன் ஒரு அம்பாசிடர் காரில்பழனிக்குச் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.
திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே இன்று காலை காரும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த கார்த்திகேயன் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயேஉடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கார்த்திகேயனின் வேறு இரண்டு குழந்தைகள் பலத்த காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரின் நிலைமையுமே கவலைக்கிடமாக உள்ளது.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->