For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தருமபுரி அருகே மேலும் ஒரு நக்சலைட் கைது

By Staff
Google Oneindia Tamil News

தருமபுரி:

தருமபுரி அருகே மாந்தோப்பில் பதுங்கியிருந்த ஒரு நக்சலைட்டைப் போலீசார் வளைத்துப் பிடித்து கைதுசெய்தனர்.

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாந்தோப்பில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளைக் கடந்த நவம்பர் 24ம்தேதி போலீசார் கண்டுபிடித்தனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் சிவா என்ற நக்சலைட்சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து ஐந்து பெண்கள் உள்பட 25க்கும் மேலான நக்சலைட்டுகளைப் போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்தனர். மேலும் சில நக்சலைட்டுகள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில் சாமல்பட்டி அருகே உள்ள மாந்தோப்பில் தப்பியோடிய நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக க்யூபிரிவு போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த மாந்தோப்பைச் சுற்றி வளைத்த போலீசார் அங்கு பதுங்கியிருந்த துரை என்ற நக்சலைட்டைக்கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு பைப் வெடிகுண்டையும் போலீசார் கைப்பற்றினர்.

அவர் பின்னர் ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X