புலிகளின் ரேடியோ: இந்தியாவிலும் கேட்கும்?
கொழும்பு:
"வாய்ஸ் ஆப் டைகர்ஸ்" என்ற விடுதலைப் புலிகளின் வானொலியின் ஒலிபரப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.தனது புதிய மேம்படுத்தப்பட்ட ரேடியோ ஒலிபரப்பை வரும் 16ம் தேதி முதல் புலிகள் இயக்கம் தொடங்க உள்ளது.இதனால் இந்த ரேடியோ ஒலிபரப்பை தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் கேட்க முடியும் என்று கூறப்படுகிறது.
வானொலி ஒலிபரப்பை மேம்படுத்துவதற்காக புலிகள் சமீபத்தில் நார்வேயிடமிருந்து சக்தி வாய்ந்த பலவானொலிக் கருவிகளை வாங்கினர்.
இக் கருவிகள் மூலம் "வாய்ஸ் ஆப் டைகர்ஸ்" தற்போது நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகசோதனை ஒலிபரப்புகளும் நடந்து வருகின்றன.
பெரும்பாலும் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த புதிய ஒலிபரப்பு தெளிவாகக் கேட்பதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து முழு அளவிலான ஒலிபரப்பை வரும் 16ம் தேதி தொடங்க புலிகள் முடிவு செய்துள்ளனர். இதனால்புலிகளின் இந்த வானொலி ஒலிபரப்பை தமிழகத்திலும் கேட்க முடியும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications