For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 ஏழை குடும்பங்களுக்கு புது வீடுகள்: மாதா அமிர்தானந்த மயி மடம் ஏற்பாடு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மாதா அமிர்தானந்த மயி மடத்தின் சார்பில் ராமேஸ்வரம் அருகே ஏழைகளுக்காக 200 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.வரும் 10ம் தேதி ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி இவற்றைத் திறந்து வைக்கவுள்ளார்.

பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் மாதா அமிர்தானந்த மயி மடம், ஏழை மக்களுக்காக ஏராளமானநலத் திட்டப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் சுமார் 200 குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டித் தரும் பணியிலும்மாதா அமிர்தானந்த மயி மடம் ஈடுபட்டது.

அதன்படி மாதா அமிர்தானந்த மயி தேவியின் பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் மூலம் பெறப்பட்ட பணத்தைக்கொண்ட சுமார் 200 வீடுகள் ராமேஸ்ரம் அருகே உள்ள சம்பை கிராமத்தில் கட்டப்பட்டுள்ளன.

இந்த வீடுகளை வரும் 10ம் தேதி ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி திறந்து வைக்கவுள்ளார்.

இந்த விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் வித்யாசாகர் ராவ், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர்ஆகியோரும் இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

சுமார் 500 விதவைகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஒன்றையும் ஸ்ரீ மாதா அமிர்தானந்த மயி தேவி அன்றுதுவக்கி வைக்கவுள்ளார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X