For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் சர்ச்சைகளுக்கு இடையில் புலிகள்-இலங்கை 4வது சுற்று பேச்சு நாளை தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 4வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளைதாய்லாந்தில் தொடங்குகின்றன.

இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு 10 மாதங்களுக்கு மேலாகி விட்டது. இதற்குள்புலிகளுக்கும் அரசுக்கும் இடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே கடும் பிரச்சனைஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கு தமிழர்கள் மீண்டும் குடியேறுவதில்பெரும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளை விட்டு ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றுபுலிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டால்தான் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுவோம் என்று இலங்கைராணுவம் கூறுகிறது.

ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று ராணுவத்தினர் நிபந்தனை விதித்தது புலிகளுடைய கோபத்தைக்கடுமையாகத் தூண்டி விட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆயுதங்களைக் கீழே போடுவது என்பதுசாத்தியமே இல்லை என்றும் அவ்வியக்கம் உறுதியாகக் கூறிவிட்டது.

இதற்கிடையே புலிகள் தங்களுடைய "வாய்ஸ் ஆப் டைகர்ஸ்" வானொலி ஒலிபரப்பை நன்குமேம்படத்தியுள்ளனர். இதற்கான சக்தி வாய்ந்த கருவிகளை நார்வே நாட்டிலிருந்து அவர்கள் இறக்குமதிசெய்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கடுமையான கடிதம் ஒன்றைஎழுதவே, அதற்கு ரணிலும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு இடையே தாய்லாந்தில் உள்ள நகோன் பதோம் என்ற இடத்தில் நாளை நான்காவது சுற்றுப்பேச்சுவார்த்தைகள் துவங்குகின்றன.

புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான அந்த இயக்கத்தின் பேச்சுவார்த்தைக்குழுவினரும், இலங்கை அமைச்சர் ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலான அரசுத் தரப்பு பேச்சுவார்த்தைக்குழுவினரும் தாய்லாந்து வந்து சேர்ந்து விட்டனர்.

புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக, நாளை துவங்கும்பேச்சுவார்த்தையிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் பேச்சுவார்த்தைகளை சுமூகமாகக் கொண்டு செல்ல முயற்சிப்போம் என்று இரு தரப்பினருமே உறுதிஅளித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X