For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை பள்ளியில் வெடிகுண்டு புரளி: மாணவர்கள், பெற்றோர் பீதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வடசென்னையில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தொலைபேசி மிரட்டலைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பல பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

வடசென்னையில் உள்ள புனித மேரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் பால்ராஜுக்கு இன்றுகாலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறிவிட்டு போனை வைத்து விட்டார்.

இதையடுத்து ராயபுரம் போலீசாருக்கு பால்ராஜ் தகவல் கொடுத்தார். பின்னர் மாணவர்களுக்கு விடுமுறை அளித்துஅவர்களை வீட்டுக்கு அனுப்பினார்.

வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த போலீசார், அப்பள்ளியில் தீவிர சோதனைநடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கு கிடைக்கவில்லை.

இதையடுத்துதான் அந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

ஆனாலும் இந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவவே, வடசென்னை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள்குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பியிருந்த பெற்றோர்களும் கடும் பீதியுடன் பள்ளிகளை நோக்கிப்படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து வடசென்னையில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகப் புரளியைக் கிளப்பிய மர்ம நபரைத் தேடும் பணியில்போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X