திண்டுக்கல் நகை வியாபாரி வீட்டில் ரூ.40 லட்சம் நகை, பணம் கொள்ளை
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, அங்கிருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ளநகை, பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
திண்டுக்கல் ராமசாமி நகரைச் சேர்ந்த நகை வியாபாரி ஜெயராமன். இவர் சமீபத்தில் தன் வீட்டைப் பூட்டிவிட்டுகுடும்பத்தினருடன் பெங்களூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை ஊர் திரும்பிய ஜெயராமன், வீட்டுக்குள் உள்ள பீரோவும் லாக்கரும்உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
அதிலிருந்த ஐந்து கிலோ தங்கம், 60 கிலோ வெள்ளி மற்றும் ரூ.10 லட்சம் பணம் ஆகியவைகொள்ளையடிக்கப்பட்டிருந்தன. மேலும் வீட்டுக்குள் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளும்திருடப்பட்டிருந்தது.
வீட்டின் பின்புறம் வழியாகத்தான் கொள்ளையர்கள் நுழைந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஜெயராமன் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். மோப்ப நாயுடன் அவருடையவீட்டுக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.40 லட்சம் என்று தெரிய வந்துள்ளது.கொள்ளையர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications