உயர் நீதிமன்ற வக்கீலைத் தாக்கிய போதைக் கும்பல்
சென்னை:
சென்னையில் உயர் நீதிமன்ற வக்கீலை ஒரு கும்பல் கடுமையாகத் தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகேந்திரன். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகஇருக்கிறார். இவரது வீடு புரசைவாக்கத்தில் உள்ளது.
கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நடக்கவுள்ள ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனித்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார் நாகேந்திரன்.
அப்போது வீட்டுக்கு அருகே வரும்போது 10 பேர் கொண்ட கும்பல் நாகேந்திரனையும், அவருடைய உறவினர்தவசி என்பவரையும் வழிமறித்தது.
பின்னர் உருட்டுக் கட்டைகளால் இருவரையும் அக்கும்பல் தாக்கத் தொடங்கியது. தாக்குதல் குறித்து அறிந்ததும்அக்கம் பக்கத்தில் இருந்தோர் நாகேந்திரனையும், தவசியையும் மீட்டு ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ளச் செய்தனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல், வீடு வீடாகச் சென்று கத்தியைக் காட்டி மிரட்டி நாகேந்திரனைத் தேடத்தொடங்கியது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் வருவதைஅறிந்ததும் அக்கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. தாக்குதலில் நாகேந்திரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் அந்தப் பகுதியில் தினசரி வந்து கஞ்சா, அபின் போன்ற பொருட்களைஉபயோகிப்பவர்கள் என்று ஏற்கனவே சிலர் போலீஸாரிடம் புகார் கூறியுள்ளனர்.
ஆனால் நாகேந்திரன்தான் இவ்வாறு புகார் கொடுத்தது என்று எண்ணிக் கொண்டு அக்கும்பல் அவரைத்தாக்கியதாகக் கூறப்படுகிறது.
போலீஸார் அந்தக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications