இலங்கைத் தமிழர்களுக்காக நிதி வசூலிக்க விடுதலைச் சிறுத்தைகள் முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தப் பணிகளுக்காகநிதி வசூலித்துத் தரப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறுகையில்,
இலங்கத் தமிழர்கள் பிரச்சினை குறித்து தமிழக அரசும், மத்திய அரசும் அக்கறை காட்டாமல் உள்ளன.
எனவே இலங்கையில் தமிழர்கள் வசம் உள்ள பகுதிகளில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாகநிதி வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.
இதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து எங்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்வதாகப் பலரும் கூறிவருகின்றனர்.
தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி வீரையன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
-->












Click it and Unblock the Notifications