மழையில் தத்தளித்த சென்னையைக் காப்பாற்ற ரூ. 10.45 கோடி ஒதுக்கீடு
சென்னை:
சமீபத்தில் பெய்த மழையின்போது சென்னை நகரமே நீரில் மிதந்ததையடுத்து நகரின் கழிவு நீர் செல்லும்கால்வாய்களை தூர் வாரி சீரமைக்க ரூ. 10.45 கோடியில் திட்டம் போடப்பட்டுள்ளது.
மழை நீர் வெளியேறும் கால்வாய்கள் அடைத்துக் கொண்டும், சரியாக பராமரிக்கப்படாமலும்,ஆக்கிரமிக்கப்பட்டும் இருந்ததால் சென்னை திணறியது.
இதைத் தொடர்ந்து கழிவு நீர்க் கால்வாய்களை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்தப் பணிக்காக ரூ.10.45 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரும்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்களை சீரமைக்கரூ. 9.61 கோடியும், ஓட்டேரி பகுதியில் உள்ள கால்வாய்களை சரி செய்ய ரூ. 85 லட்சம் நிதியும் உடனடியாகஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்கப்பட வேண்டும் பொதுப் பணித்துறைஅதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications