சென்னை அருகே மண் சரிந்ததில் 2 தொழிலாளர்கள் புதைந்து சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே குழாய் பதிப்பதற்காகப் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்துவிழுந்ததில் 2 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து இறந்தனர். மேலும் 4 பேர் மயங்கிய நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த ஓட்டேரி-நியூ பேரக்ஸ் சாலையில் குழாய் பதிப்பதற்காகப் பள்ளம் தோண்டும் பணியில் சிலதொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றிரவு பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தபோது பள்ளத்திற்கு மேல் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்திடீரென்று சரிந்து பள்ளத்திற்குள் விழுந்தது.

இதனால் பள்ளத்தினுள் நின்று கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டனர்.

இதையடுத்து உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அனுப்பப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து மண்ணுக்குள் புதையுண்டவர்களை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டனர்.

மயங்கிய நிலையில் ஆறு தொழிலாளர்களும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில்இரண்டு தொழிலாளர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரும் சேலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும் வெங்கடேஷ் என்பது தெரிய வந்துள்ளது. மற்றநான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+