அமெரிக்காவில் இந்திய டாக்டரின் பலே மோசடி
சிலிக்கன் வேலி:
அமெரிக்காவில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட இந்திய டாக்டருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது.
கலிபோர்னியா மாகாண அரசின் மருத்துவ உதவித் திட்டத்தில் புகுந்து விளையாடி பல 11 மில்லியன் டாலர் வரை இவர் மோசடிசெய்துள்ளார்.
சுமார் 12 டாக்டர்களின் போலி லெட்டர் பேட்கள், ரப்பர் ஸ்டாம்புகளைத் தயாரித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்குரத்தப் பரிசோதனை செய்தது உள்ளிட்ட பல டெஸ்ட்களைச் செய்யதாக கலிபோர்னியா மாகாண அரசை ஏமாற்றியுள்ளார்.
ஆனால், இந்த டெஸ்ட்களையே செய்யாமல் மெடி-கல் என்ற மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் போலி பில்களைக் கொடுத்துமில்லியன் கணக்கில் பணம் கறந்துள்ளார்.
ஏற்கனவே 1980ம் ஆண்டில் நியூயார்க்கில் இதே போல மருத்துவ நலத் திட்டத்தில் மோசடி செய்து 3.6 மில்லியன் டாலர் வரைமோசடி செய்தவர் சுரீந்தர் சிங். இதற்காக 5 ஆண்டு காலம் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார்.
இந் நிலையில் கலிபோர்னியாவிலும் தனது பிராட் வேலையைக் காட்டி 11 மில்லியன் டாலரை அடித்துள்ளார். இவர் மீதானகுற்றச்சாட்டு உண்மையானதே என கலிபோர்னியாவின் ஆரஞ்ச் கவுண்டி உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
வரும் மே மாதம் 23ம் தேதி இதில் இறுதித் தீர்ப்பு தரப்பட உள்ளது. அப்போது இவருக்கு 11 முதல் 16 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும் என்று லாஸ் ஏன்ஜெல்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது.
தான் சுட்ட பணத்தில் தனது கேர்ள் பிரண்டான லிண்டா டிசோனுக்கு மிகப் பெரிய பங்களாவையும் கார்களையும் வாங்கித்தந்துள்ளார் சுரீந்தர் சிங் பான்சி.
-->