ஏசுவே கடவுள்.. போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தைக் கலக்கிய பெண்
சேலம்:
சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ஒரு பெண், ஏசுவே கடவுள் என்று கூறிக் கொண்டுபயங்கர கலாட்டாவில் ஈடுபட்டார். இதனால் ஆணையர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம் ஆகியவை சுமார் 4மணி நேரம் பெரும் பரபரப்பில் மூழ்கின.
சேலம் நகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒரு பெண் வந்தார்.நடுத்தர வயதில் இருந்த அவர், ஆக்ரோஷத்துடன் உளவுப் பிரிவு அலுவலகத்திற்குள் நுழைந்தார்.
அங்கிருந்தவர்களிடம்ஏசுவே கடவுள், அவரை நம்பாதவர்களுக்கு அழிவுதான் என்று கத்தியபடியே சென்றார்.
இதைப் பார்த்து மிரண்ட அலுவலக ஊழியர்கள், உடனடியாக அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்த முயன்றனர்.அப்போது அந்தப் பெண், நான் என்ன பைத்தியமா? என்று கேட்டபடி கத்தினார்.
மிகவும் ஆக்ரோஷமாக இருந்த பெண்ணைப் பிடிக்க பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். அந்தப் பெண்போலீசார் படாதபாடுபட்டு அந்தப் பெண்ணை மகளிர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கும் விடவில்லை அந்த பெண்மணி. என்னைப் பைத்தியமாக நினைக்காதீர்கள், நீங்கள்தான் பைத்தியம் என்றுஆக்ரோஷமாய் கூறிய அப்பெண், காவலர்களையும் மீறிக் கொண்டு வெளியே வர முயற்சித்தார்.
இதையடுத்து அவரைப் அமுக்கி ஒரு அறையில் உட்ராக வைத்த போலீசார் சிறிது நேரத்தில் அமைதியான அப்பெண்ணை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.
இந்த களேபரத்தால் சுமார் 4 மணி நேரம் காவல் துறை ஆணையர் அலுலவகமும், மகளிர் காவல் நிலையம் கதிகலங்கின.
அந்தப் பெண் மன நிலை பாதிக்கபப்ட்டவராக இருக்கலாம் என்று தெரிகிறது. மருத்துவ பரிசோதனைகள் நடந்துவருகின்றன.
-->












Click it and Unblock the Notifications