டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்: தமிழகத்தில் சமையல் கேஸ் தட்டுப்பாடு வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாளை மறுநாள் முதல் தமிழகம் முழுவதும் எல்.பி.ஜி. சமையல் வாயுவை ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் காலவரையற்றவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயுவுக்கு பெரும் தட்டுப்பாட்டுஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வாடகைக் கட்டணம் தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சனைவெடித்துள்ளது. வாடகையை உயர்த்தித் தர பெட்ரோலிய நிறுவனங்கள் மறுத்துவிட்டதால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடலாரி உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நாளை மறுதினம் (10ம் தேதி) காலை 6 மணி முதல் இந்தப் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. இதனால் அன்றையதினத்தில் இருந்தே இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் கேஸ்சிலிண்டர்கள் வினியோகம் முழுக்க முழுக்க பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

போராட்டம் காலவரையற்றது என்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புதியசிலிண்டர்களை இப்போதே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+