"மதமாற்ற தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று தேசிய சிறுபான்மை ஆணையம்வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் தொடர்பாக தமிழக கிருஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன்ஆணைய உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பின்னர் ஆணையத்தின் துணைத் தலைவர் தர்லோச்சன் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் சமீபத்தில் கொண்டு வரப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் தொடர்பாக கிருஸ்தவசமூகத்தினரின் குறைகள் கேட்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆளுநிர் ராம் மோகன் ராவையும் சந்தித்துபேசவுள்ளோம்.

இந்த சட்டம் குறித்து தனிப்பட்ட முறையில் நாங்கள் கருத்துக் கூற முடியாது. மாநில அரசால் சட்டசபையில்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. அவ்வளவுதான் இதுகுறித்து நாங்கள் கூற முடியும்.

மேலும் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை கிருஸ்தவர்கள், முஸ்லீம்கள், பார்சிகள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் என ஐந்து மதசிறுபான்மையினர் உள்ளனர். இவர்களுக்கும், பெரும்பான்மை சமூகத்தினருக்கும் இடையே நல்லுறவும்,ஒத்துழைப்பும் நிலவ வேண்டும்

"இந்துத்துவா" என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை பாரதீய ஜனதாக் கட்சி விளக்க வேண்டும்.இதுதொடர்பாக பகிரங்க விவாதம் நடத்த வேண்டும் என்று அது கூறியிருப்பதை வரவேற்கிறோம்.

"இந்துத்துவா" என்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு விளக்கம் அளிக்கின்றனர். இதனால் குழப்பமே மிஞ்சுகிறது.இதற்கு ஒரு இறுதியான, தெளிவான, உண்மையான விளக்கம் ஏற்பட வேண்டும் என்றார் சிங்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+