பிப்ரவரி 26ல் நீதிமன்றத்தில் ஆஜராக தினகரனுக்கு உத்தரவு
சென்னை:
சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்தவழக்கில் வரும் பிப்ரவரி 26ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தினகரனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுட்ட பணத்தை வெளிநாட்டில் சட்ட விரோதமாக பதுக்கினார் தினகரன். இது குறித்து அவர் மீது புகார்சொல்லப்பட்டபோது நான் ஒரு என்.ஆர்.ஐ., சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவன் என்று தெரிவித்தார்.
ஆனால், பெரிகுளத்தில் போட்டியிட்டு எம்.பியானார். வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர் எப்படி இந்தியாவில் போட்டியிட்டுஎம்.பியாகலாம் என்று கேட்டு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன்ஆகியோ முன் நேற்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜராகி வாதாடிய சுவாமி, கோர்ட் நோட்டீஸ் அனுப்பியும் கூட தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துவருகிறார். அவரை நீதிமன்றத்துக்கு வரச் செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்ததுப் பேசிய நீதிபதிகள், இந்த வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அன்றைய தினம் தினகரனோஅல்லது அவரது வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சுப்பிரமணியம் சுவாமி ஆங்கிலப் பத்திரிக்கை மூலம்விளம்பரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனால் அன்றைய தினம் தினகரனோ அல்லது அவரது வழக்கறிஞரோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய கட்டாயம்ஏற்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications