For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கோவை சிறையில் மனித உரிமை மீறப்படவில்லை"

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளிடம் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகஎழுந்த குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறையின் உயர் அதிகாரிகள் மறுத்தனர்.

கோயம்புத்தூர் தொடர் வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளமக்கள் குடியரசுக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சுபைதா சமீபத்தில் சிறைக்கு வந்தபோதுசெல்போன்களுடன் சிக்கினார்.

ஆனால் சிறைக் காவலர்கள் தன்னையும் தன் மகனையும் பிடித்துக் கீழே தள்ளிவிட்டதாக சுபைதா புகார்கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்துதான் கோயம்புத்தூர் சிறையில் மனித உரிமை மீறல்கள் நடந்து விட்டதாக மதானி உள்ளிட்டசில தீவிரவாதிகள் குற்றம் சாட்டத் தொடங்கினர். மேலும் இதைக் கண்டித்து சிறைக்குள்ளேயே அடிக்கடி அவர்கள்சத்தம் போட்டு கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கோயம்புத்தூர் சிறையில் விசாரணை நடத்திய சிறைத் துறை டி.ஐ.ஜியான பி.எம்.எஸ்ரா கூறுகையில்,

சிறைக் குறிப்புப் புத்தகத்தில் உள்ள விதிமுறைகள் படியே கைதிகளிடம் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. இதில்எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் நடைபெற்றிருக்கவில்லை.

மேலும் மத்திய ரிசர்வ் போலீசார் கோயம்புத்தூர் சிறையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும்கூடுதல் சிறை வார்டன்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கைதிகளின் பிரச்சனை இன்றி சிறை மிகவும் அமைதியாகவும், சிறைக் காவலர்களின் முழுக்கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றார் எஸ்ரா.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X