For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகளின் கூட்டங்கள்: சு.சுவாமியின் மனு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

விடுதலைப்புலிகள் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இந்திய அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாதுஎன்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது.

புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் தற்போது நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக,நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த நவம்பர் 25ம் தேதி நிதி திரட்டும் மாநாடு ஒன்று நடைபெற்றது.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த மாநாட்டின் மூலம்சர்வதேச நாடுகளிலிருந்து நிதி திரட்டப்பட்டது.

நார்வே அரசு ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் இலங்கை, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்டநாடுகள் கலந்து கொண்டு நிதியுதவிகளை அறிவித்தன. இம்மாநாட்டில் புலிகளும் கலந்து கொண்டனர்.

புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த மாநாட்டில் மத்திய அரசு அதிகாரிகள் யாரும்கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத்தில் சுவாமி பொது நல மனு ஒன்றைக் தாக்கல்செய்திருந்தார்.

இம்மாநாட்டில் மட்டுமல்லாமல் புலிகள் பங்கேற்கும் தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் மற்றும் கூட்டங்களில்இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அம்மனுவில் சுவாமிகோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசு அளித்த பதிலில், நார்வேயில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுவாமியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X