பிரஸ் கிளப்பில் குண்டு வைத்த மதானியின் உறவினருக்கு 3 நாள் போலீஸ் காவல்
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் மதானியின் உறவினர்நெளஷத், கோவை பிரஸ் கிளப்பில் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 நாள் போலீஸ் காவலில்வைக்கப்பட்டுள்ளார்.
கோவை பிரஸ்கிளப்பில் சமீபத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாககோவை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது கேரளாவைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில்மதானியின் உறவினர் நெளஷத்துக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தெரய வந்தது.
இதையடுத்து நிெளஷத்தை போலீஸார் கைது செய்தனர். சமீபத்தில் கோவை மத்திய சிறையில் காவலர்களுடன்மதானியின் மனைவி தகராறு செய்தார். அப்போது நெளஷத்தும் சேர்ந்து கொண்டு தகராறு செய்தார்.
கைது செய்யப்பட்ட நெளஷத்தை 3 நாள் போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரிக்க 3-வது நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர்.
அதற்கு நீதிபதி மல்லிகா அனுமதி அளித்தார். இதையடுத்து போலீஸார் நெளஷத்தை பலத்த பாதுகாப்புடன்சிறையிலிருந்து போலீஸ் காவலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துபோலீசார் விசாரணை நடத்துவர்.
-->












Click it and Unblock the Notifications