வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற 74 வயது முதியவர் கைது
சென்னை:
வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற 74 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த முதிய நபரின் பெயர் ஸ்ரீமன் நாராயணன். சென்னை-பாரிமுனை பகுதியில் நின்று கொண்டிருந்த விஷால்அகர்வால் என்ற வியாபாரியிடம் நைசாகச் சென்று பேச்சுக் கொடுத்தார்.
பின்னர், தன் சூட்கேஸ் திருடு போய் விட்டது என்றும் அதில் இருந்த ரூ.40,000க்கான செக் மற்றும் ரூ.5,000ரொக்கப் பணமும் உங்களிடம்தான் இருக்கிறது என்றும் அவற்றை உடனடியாகத் தன்னிடம் திருப்பித் தாருங்கள்என்றும் அகர்வாலை நாராயணன் மிரட்டினார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட அகர்வால் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்துநாராயணனிடம் விசாத்தபோது அவர் சொன்னது பொய் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார்கைது செய்தனர்.
தன் வயதைப் பார்த்து மற்றவர்கள் இரக்கப்பட்டு அகர்வாலிடமிருந்து பணத்தை பெற்றுத்தர உதவுவார்கள் என்றுநினைத்தே தான் இப்படிச் செய்ததாக ஸ்ரீமன் நாராயணன் போலீசாரிடம் கூறினார்.
-->