இடிக்கப்பட்ட பள்ளிகள் சீரமைப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை:
சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் இடிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக சென்னைமாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
சென்னை மேயராக ஸ்டாலின் பதவியில் இருந்தபோது, ஊழல் நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள மாநகராட்சிப்பள்ளிகளில் சோதனைக்காக சில பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டு, மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளிகளில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. 142வது வட்டத்தில் இடிக்கப்பட்ட பள்ளியில்தற்போது சீரமைப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோதனை என்ற பெயரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாநராகட்சிப் பள்ளிகளை இடித்து வருவதற்கு பல தரப்பிலும்கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம்அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
-->