10 தமிழ்நாடு விடுதலைப் படை நக்சலைட்டுகள் கைது
கடலூர்:
தமிழ்நாடு விடுதலைப் படை நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளை கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூரைச் சேர்ந்தவர் வியாபாரி நடேசன். இவர், பாண்டிச்சேயைச் சேர்ந்த குணசீலன் என்பவருக்கு ரூ. 10 லட்சம் கடனாகவழங்கியிருந்தார். ஆனால் குணசீலன் பணத்தைத் திருப்பித் தராமல் அலைக்கழித்து வந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த ன்னாள் தொண்டர் பரூக் கான் என்பவரை அணுகிய நடேசன்,குணசீலனிடமிருந்து பணத்தைப் பெற்றுத்தர கோரியுள்ளார். இதற்காக பரூக் கானுக்கு ரூ. 1.25 லட்சம் முன் தொகையாகவும்கொடுத்துள்ளார்.
இதையடுத்து தனது நண்பர்கள் சிலரோடு (அனைவரும் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள்) பாண்டிச்சேரிக்கு சென்றார்.அங்கு குணசீலன் என்று நனைத்து அரசு ஊழியர் ஒருவரை தவறுதலாகக் கடத்தி வந்தனர்.
ஆனால், உண்மை தெந்ததும் அவரை விடுவித்து விட்டனர். விடுவிக்கப்பட்ட அரசு ஊழியர், பரூக் கான் உள்ளிட்டவர்கள் குறித்துபோலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து பரூக் கான் கும்பலைச் சேர்ந்தவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆயினும் அவர்கள்ஜாமீனில் வெளியே விடப்பட்டனர்.
அதன் பிறகு பாண்டிச்சேயை விட்டு கிளம்பிய பரூக் கான் கும்பல், நேராக வெள்ளிக்கிழமை அதிகாலை நடேசன் வீட்டுக்கு வந்தது.அவரிடம் கூடுதலாக பணம் கேட்டுள்ளனர். அவர் தர முடியாது என்று மறுத்துள்ளார்.
இதையடுத்து அவரை கொன்று விடுவோம் என்று அவர்கள் மிரட்டினர். அப்போது நடேசனின் மகன், வீட்டை விட்டு நைசாக வெளியேறி,சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் ஜீப்பை மறித்து நடந்ததைக் கூறினார். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து பரூக்கான் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்தனர்.
இவர்களை விசாரித்தபோது தான் தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
பரூக் கானுடன் கைது செய்யப்பட்டவர்கள் விவரம்: முத்து, சரவணன், சரவணன், வீரமுத்து, ஜான்சன், ஜெயக்குமார், மகாலிங்கம்,தமிழவன், சுரேஷ். இவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனன.
-->