சாத்தான்குளம்: 24ம் தேதி விண்ணப்பிக்க அதிமுகவினருக்கு ஜெ. உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாத்தான்குளத்தில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 24ம் தேதி கட்சியின் தலைமையகத்தில் வந்துவிண்ணப்பிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் பிப்ரவரி 26ம் தேதி சாத்தான்குளம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் வரும் 24ம் தேதி தங்கள் விண்ணப்பங்களைசமர்ப்பிக்கலாம்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்என்று அவ்வறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதற்கிடையே அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு அறிக்கையில்ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் தலைமையிலான இந்தக் குழுவில், அதிமுகவின் பொருளாளரான சீனிவாசன், அமைப்புச்செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், ஜஸ்டின் செல்வராஜ், அன்பழகன் மற்றும் சையது கான் ஆகியோர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதான அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட தம்பித்துரை மற்றும் ராஜ்யசபா எம்.பியான மலைச்சாமி ஆகியோர்ஆட்சிமன்றக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+