விவசாயிகளுக்கு அரிசி, பருப்பு வழங்க வேண்டும்: அரசுக்கு திமுக யோசனை
சென்னை:
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இலவச மதிய உணவு வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு அரிசி மற்றும்பருப்பை இலவசமாக வழங்கலாம் என்று திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.
அப்போதுதான், காவிரி டெல்டா பகுதிகளை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச உணவு வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு இலவச அரிசி மற்றும்பருப்பை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சம்பா பயிர்கள் கருகத் தொடங்கியதைத் தொடர்ந்து இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை திசைதிருப்பப் பார்த்த தமிழக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பவானி மற்றும் கபினி அணைகளில் கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து பேரியக்கம் நடத்தப்படும்,தமிழகத்தில் இலவச மின்சாரத் திட்டம் தொடர வேண்டும் ஆகியவை உள்ளிட்ட 16 தீர்மானங்கள் இன்றை திமுகசெயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications