இலங்கைக்கு தப்ப முயன்ற 11 தமிழ் அகதிகள் கைது
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்திலிருந்து கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற 11 தமிழ் அகதிகளைப் போலீசார்கைது செய்தனர்.
சென்னை அருகே உள்ள புழல் பகுதியில் இலங்கை அகதிகளுக்கான முகாம் உள்ளது. இந்த முகாமிலிருந்து 11தமிழர்கள் சமீபத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
நேராக ராமேஸ்வரம் சென்ற அவர்கள், அங்கிருந்து கள்ளத் தோணிகள் மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றனர்.
ஆனால் அதற்குள் அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை மீண்டும் புழல் அகதிகள்முகாமுக்கே அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த 11 பேரும் இலங்கையில் செயல்படும் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இலங்கையில் தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளதாலும், விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையேஅமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதாலும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பவிரும்பியதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications