ராஜபாளையத்தில் போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகர கொள்ளை
ராஜபாளையம்:
ராஜபாளையம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள கடைகளில் நள்ளிரவில் சுவரில் துளை போட்டு பணம்கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தென்காசி சாலையில் தெற்கு காவல் நிலையம் அமைந்துள்ளது.
இந்த போலீஸ் நிலையத்தின் அருகில் பல இரும்புக் கடைகளும், மூக்குப் பொடி கடைகளும் உள்ளன.
நேற்று இரவு இங்குள்ள பல கடைகளின் சுவரைத் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தபணப் பெட்டிகளை உடைத்து பல லட்ச ரூபாய் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடி விட்டனர்.
இன்று காலையில் கடைகளைத் திறந்து பார்த்தபோதுதான் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவரம் அவற்றின்உரிமையாளர்களுக்குத் தெரிய வந்தது.
போலீஸ் நிலையத்தின் வெகு அருகில் உள்ள கடைகளிலேயே துணிகரக் கொள்ளை நடந்திருப்பதுராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களைத் தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications