கடைசி ஒருநாள் போட்டி: இந்தியா மீண்டும் தோல்வி
ஹாமில்டன்:
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்தோல்வி அடைந்தது.
நியூஸிலாந்து சுற்றுப் பயணம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருந்தது.
முதலில் இரண்டு டெஸ்ட் பந்தயங்களையும் நியூஸிலாந்திடம் இழந்த இந்தியா, அடுத்து தொடர்ந்து நான்குஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு தொடர்களையும் நியூஸிலாந்து அணி வென்றது.
இந்நிலையில் இன்று ஏழாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணிதுவக்கத்திலேயே சரிவுகளைச் சந்தித்தது. 45வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122ரன்களை மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை வேகமாகப் பறிகொடுத்தாலும்,அதன் பின்னர் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தியது.
கடைசியில் 28.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 125 ரன்களை எடுத்து நியூஸிலாந்து அணிவெற்றி பெற்றது.
வெல்லிங்டனில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டி மற்றும் ஆக்லாந்தில் நடைபெற்ற ஆறாவது ஒருநாள் போட்டிஆகிய இரண்டில் மட்டுமே ஆறுதல் வெற்றி பெற்று தாயகம் திரும்புகிறது இந்திய அணி.
இனி ஒரு மாதம் முழுமையாக ஓய்வெடுத்த பின்னர் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளஉலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி பங்கு பெறுகிறது.
-->