For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாட்டரிக்குத் தடை: வியாபாரி, மனைவி, குழந்தை தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

சோழவந்தான்:

தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுரை மாவட்டம்சோழவந்தானைச் சேர்ந்த ஒரு லாட்டரி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடையமனைவி தன் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

சோழவந்தானைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் சென்னையில் லாட்டரிச் சீட்டு வியாபாரம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை செய்வதற்குத் தடை விதித்தது.

இதையடுத்து காதர் பாட்ஷா சென்னையிலிருந்து சொந்த ஊரான சோழவந்தானுக்குத் திரும்பினார். இங்கு வேறுஏதாவது வேலை கிடைக்குமா என்று பல இடங்களில் விசாரித்துப் பார்த்தார்.

ஆனால் காதர் பாட்ஷாவுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போன அவர் நேற்றுமுன்தினம் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி மகபூப் ரோஜா, தன் குழந்தையைக் கிணற்றில் வீசிக்கொன்றுவிட்டு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டவிஷயம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றத்தில் விசாரணை:

இதற்கிடையே வரும் 21ம் தேதி வரை லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடர சென்னை உயர் நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டது.

லாட்டரி தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்முன்னிலையில் விசாரணை நடந்தது.

லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களின் சார்பாக, காங்கிரஸ்ஜனநாயகப் பேரவையின் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான ப. சிதம்பரம் வாதாடினார்.

இன்று மாலை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியம் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். வரும்21ம் தேதி வரை லாட்டரிச் சீட்டு விற்பனையைத் தொடரலாம் என்று அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

இவ்வழக்கு தொடர்பாக நிருபர்களிடம் சிதம்பரம் கூறுகையில்,

இரவோடு இரவாக இந்தத் தடையை அமல்படுத்தியிருக்க வேண்டாம். இதனால் எத்தனையோ வியாபாரிகள்பாதிக்கப்பட்டுள்ளனர். பல லாட்டரிக் குலுக்கல்கள் அடுத்தடுத்த தேதிகளில் நடக்கவிருந்தன. இதனால் லாட்டரிச்சீட்டு வாங்கிய ஏராளமான மக்களும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏதாவது பரிசுகள் விழுந்தால் எப்படி அவற்றை வழங்குவது என்பது போன்ற சிக்கல்கள் உள்ளன.எனவே திடுதிப்பென்று இரவோடு இரவாக லாட்டரிச் சீட்டு விற்பனைக்குத் தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. சில நாட்களாவது அவகாசம் அளித்திருக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X