For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோவில் அருகே வக்கீல் ஓட ஓட விரட்டிக் கொலை: கந்து வட்டி ரவுடிகள் அட்டகாசம்

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே வக்கீல் ஒருவரை கந்து வட்டி வசூலிக்கும் 6 பேர் கொண்ட ஒரு கும்பல் ஓட ஓட விரட்டிஅரிவாளால் வெட்டிக் கொன்றது.

நாகர்கோவிலை அடுத்த சிராயன்குழியைச் சேர்ந்தவர் தங்ககுமார். 38 வயதான இவர் குழித்துறை நீதிமன்றத்தில்வக்கீலாகப் பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பள்ளியாடி என்ற இடத்திலிருந்து தன்னுடைய பைக்கில் தங்ககுமார் வந்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஆறு பேர் அவரை வழிமறித்தனர்.

அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்ககுமார், உடனே பைக்கை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தார். ஆனால்அந்த ஆறு பேர் கும்பல் அவரை விடாமல் துரத்தியது.

பின்னர் தங்ககுமாரைச் சுற்றி வளைத்த அந்த ஆறு பேரும் அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டினர். பலத்தகாயமடைந்த அவர் அருகிலிருந்த ஒரு தோப்பில் விழுந்து இறந்து போனார்.

நேற்று காலைதான் அவர் அங்கு பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் நேற்றுபெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டன.

போலீசார் விரைந்து சென்று தங்ககுமாரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு போன் செய்ததங்ககுமார், "எனக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. என் உயிருக்கு ஆபத்துஏற்பட்டுள்ளது" என்று புகார் கூறியிருந்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த கந்துவட்டி வசூலித்து வரும் ரவுடிக் கும்பல்தான் தங்ககுமாரைக் கொலை செய்ததாகத்தெரிய வந்துள்ளது.

கந்து வட்டி கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கும் பணியில்தங்ககுமார் ஈடுபட்டிருந்தார். இதைப் பிடிக்காத அந்த ரவுடிகள்தான் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர்.

தங்ககுமார் கொலை சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டனர்.

தங்ககுமாருக்கு உஷா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X