நெடுமாறன் மீது 24ம் தேதி "பொடா" குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மீது வரும்24ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார் கூறினார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக கடந்த ஆகஸ்டு 1ம் தேதி க்யூ பிரிவு போலீசாரால் நெடுமாறன் கைதுசெய்யப்பட்டார். அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சுப வீரபாண்டியன், டாக்டர் தாயப்பன் மற்றும் புதுக்கோட்டை பாவாணன்ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நெடுமாறன், பாவாணன் மற்றும் வீரபாண்டியன் ஆகிய மூன்று பேரும்சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, இவர்கள் மூன்று பேர் மீதும் வரும் 24ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசுவழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து 24ம் தேதி வரை அவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி எல். ராஜேந்திரன்உத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications