பாஸ்போர்ட்டு விண்ணப்பிக்க எளிய வசதி: சென்னையில் அறிமுகம்
சென்னை:
புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருபவர்கள் நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருப்பதைத்தவிர்ப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.
பாஸ்போர்ட் எடுப்பதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் நீண்ட வரிசைகளில் நின்று கொண்டிருப்பது அந்தஅலுவலகங்களில் அன்றாடம் காணும் நிகழ்ச்சிதான்.
இவ்வாறு அவர்கள் நின்று கொண்டு நேரத்தை விரயப்படுவதைத் தவிர்ப்பதற்காகப் புதியதொரு திட்டத்தைசென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மதிவதனன் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
இனி யாரும் வந்து மணிக்கணக்கில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.28213553, 28213563 ஆகிய இரண்டு எண்களில் ஏதாவது ஒரு எண்ணுக்குத் தொலைபேசி செய்து"அப்பாயின்ட்மெண்ட்" பதிவு செய்து கொள்ள வேண்டும்.
"அப்பாயின்ட்மெண்ட்" கொடுக்கப்பட்ட நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து, 20 அல்லது 30 நிமிடங்களில்பாஸ்போர்ட் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டுச் சென்று விடலாம்.
இதனால் விண்ணப்பதாரர்களுக்கு நேரம் மிச்சமாகிறது. பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்களுக்கும் சிரமங்கள்குறையும்.
தங்களுடைய விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்தும் இந்தத் தொலைபேசி எண்களைத்தொடர்பு கொண்டு மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு நாளை முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நாளை விடுமுறை என்பதால்நாளை மறுநாள் முதல் மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவிலேயே சென்னையில்தான் இந்தத் திட்டம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்மதிவதனன்.
-->