For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொடா பாய்கிறது: அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்தால் கடும் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை::

தமிழகத்தில் அனுமதி இல்லாமல் ஆயுதங்கள், வெடிபொருள்கள் வைத்திருப்பவர்கள் மீது பொடா சட்டம் பாய உள்ளது.

தமிழகத்தில் தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. இதற்காக பொடா சட்டத்தைப்பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் ஆளுநர் ராம்மோகன் ராவ் மூலமாக அரசு பிறப்பித்துள்ளது.

இதன்படி தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் யாராவது அனுமதி இல்லாமல் ஆயுதங்களோ அல்லது வெடி பொருட்களோவைத்திருந்தால் அவர்கள் மீது பொடா சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். வெடி மருந்து, ஆயுதங்கள்வைத்திருப்பவர்களுக்கு உதவி செய்யும் நபர்கள் மீதும் இந்த தண்டனைகள் பாயும்.

ஏற்கனவே வெடிபொருள் தடுப்பு, ஆயுதத் தடுப்பு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மீதும் பொடா சட்டத்தின் கீழும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தமிழக அரசு கூறியுள்ளது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X