திமுகவுடன் கூட்டணி வருமா?: எதுவும் நடக்கலாம் என்கிறது காங்கிரஸ்
சென்னை:
திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்குமா என்பது குறித்து காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஜி.கே. வாசன்கூறினார்.
சென்னையில் நடந்த ஒரு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட வாசன் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அரசியலில் எந்தநேரமும் எந்த மாற்றமும் ஏற்படலாம்.
சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற தமிழக காங்கிரஸ் கட்சியின்கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும் என்று நம்புகிறேன்.
மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த இடைத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆட்சியாளர்கள் ஏதேனும்முறைகேட்டில் ஈடுபட்டால் அதில் தேர்தல் கமிஷன் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்வாசன்.
-->