For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

""மதானியை விடுவிக்காவிட்டால்..."": அல் உம்மா வெடிகுண்டு மிரட்டல்!

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள மதானியை விடுவிக்காவிட்டால் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடுமாவட்டங்களில் உள்ள கோர்ட்டுகள், கிளைச் சிறைகளை குண்டு வைத்துத் தகர்ப்போம் என அல் உம்மாதீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் செல்லமுத்து, போலீஸ் எஸ்.பி. சங்கர் ஆகியோருக்கு இரண்டுநாட்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில்,

கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரான மதானியைஉடனடியாக விடுவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், ஜனவரி 18 மற்றும் 19 ஆகியதேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம் செஷன்ஸ்கோர்ட், கூடலூர், குன்னூர், கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கள் மற்றும் கிளைச் சிறைகளைஎங்களது தற்கொலைப் படையினர் குண்டு வைத்துத் தகர்ப்பார்கள் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைகள்ஆகியவற்றையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக அல் உம்மா தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சிறைகள் மற்றும் கோர்ட்டுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X