வெடிகுண்டு புரளியால் நடு வழியில் நின்ற ரயில்

Subscribe to Oneindia Tamil

பெருந்துறை:

ஹைதராபாத்திலிருந்து எர்ணாகுளத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, அந்த ரயில் பெருந்துறை அருகே உள்ள மீஞ்சூர் ரயில் நிலையத்தில்நிறுத்தப்பட்டு, சோதனையிடப்பட்டது.

ஆந்திராவின் ஹைதராபாத்திலிருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு இன்று காலை ஒரு ரயில் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் காலை சுமார் 8 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டருக்கு ஒரு மர்மதொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவன், ஹைதராபாத்-எர்ணாகுளம் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் எந்த நேரத்திலும்அது வெடிக்கலாம் என்றும் கூறிவிட்டு போனை வைத்து விட்டான்.

இதையடுத்து தருமபுரி ஸ்டேஷன் மாஸ்டர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். அப்போது அந்தரயில் பெருந்துறை அருகே வந்து கொண்டிருந்தது.

உடனே மீஞ்சூர் ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அதற்குள் வெடிகுண்டு நிபுணர்களுடன் மீஞ்சூர்ரயில் நிலையத்தை அடைந்த போலீசார், பயணிகள் அனைவரையும் இறக்கி விட்டு ரயில் முழுவதும் சோதனைநடத்தினர்.

ஆனால் ரயில் முழுவதும் தேடியும் எந்த ஒரு வெடிகுண்டும் சிக்கவில்லை. இதையடுத்து குண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் வெறும் புரளி என்று தெரிய வந்தது.

இதையடுத்தே பயணிகள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டனர். இதைத் தொடர்ந்து காலை 11.45 மணிக்கு அந்தரயில் மீண்டும் கிளம்பி எர்ணாகுளம் நோக்கிச் சென்றது.

இந்த வெடிகுண்டு புரளியால் அந்த ரயில் பாதையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+