தலித்களை நான் அவமதிக்கவில்லை: காஞ்சி சங்கராச்சாரியார்
சென்னை:
அம்பேத்கர் ஜனநாயகப் பேரவையின் கொடியை காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்அறிமுகப்படுத்தினார்.
இந்தப் பேரவையின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவின்போது அதன் கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார்ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
தலித்கள் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் பேசிய சில கருத்துக்கள் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ள நிலையில்அம்பேத்கர் பெயரில் உருவான அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய சங்கராச்சாரியார், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் உயர வேண்டும் என்பதற்காகவேஅம்பேத்கர் பாடுபட்டார். அவருடைய லட்சியத்தை நிறைவேற்றும் குறிக்கோளுடன் இன்று பல அமைப்புகளும்நம் நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கோவிலுக்கு நாம் தினமும் கட்டாயம் செல்ல வேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு முன் குளித்து விட்டுத்தூய்மையாகச் செல்ல வேண்டும் என்று நாம் கூறுவதுண்டு.
அதேபோல் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பேசியதைத்தான் சிலர் தவறாகப் புரிந்துகொண்டனர்.
தலித்துக்களை "அரிஜன்" என்றார் காந்தியடிகள். "ஆதி திராவிடர்" என்று அழைத்தார் எம்.ஜி.ஆர்.
நான் அவர்களையோ அல்லது வேறு எந்த ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையோ அவமதித்தோ, தவறாகவோபேசியதே இல்லை. இந்து மதமும் இதையேதான் வலியுறுத்துகிறது.
ஆனால் சிலர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு நல்லதுக்குச் சொன்னாலும் அதை அரசியல் ஆக்கிவிடுகின்றனர் என்றார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
-->