கொட்டாம்பட்டி அருகே வேன்-பஸ் மோதல்: 2 ஐயப்ப பக்தர்கள் பலி
கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி அருகே வேனும் தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆந்திராவைச்சேர்ந்த 2 ஐயப்ப பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று விட்டு ஊருக்குத்திரும்பிக் கொண்டிருந்தனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள நாகமங்கலம் என்ற இடத்தில் வேன் சென்றுகொண்டிருந்தபோது, அது எதிரே வந்த ஒரு தனியார் பஸ்சுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் வேனில் பயணம் செய்த குருமூர்த்தி (54) மற்றும் வட்டதிசிமக்கலும் (50) ஆகிய இரு ஐயப்பபக்தர்களும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சாலைவிபத்துக்களில் இந்த வாரத்தில் மட்டும் இதுவரை 23 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications