பவானி அணை: கேரளத்தைக் கண்டித்து கோவை அருகே பந்த்
கோவை:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை எதிர்த்து கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில்பொதுமக்கள் இன்று முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டும் முயற்சியில் கேரள அரசுஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்தின் கோவை, ஈரோடு, கோபிச்செட்டிப் பாளையம் ஆகிய பகுதிகள்கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப் பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீருக்கும்பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இதனால் கேரளம் அணை கட்டுவதை இப் பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஒவ்வொருபகுதியிலும் ஒவ்வொரு நாள் போராட்டங்களும் சாலை மறியல்களும் நடந்து வருகின்றன.
இன்று கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் முழு அடைப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று(சனிக்கிழமை) காலை முதல் இங்கு அனைத்துக் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
டாக்சி, ஆட்டோக்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. இதையடுத்து இங்கு இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டது.
மேலும் பொது மக்கள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்பினர் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டமும்நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications