கூடல் எக்ஸ்பிரஸ் குருவாயூர் எக்ஸ்பிரஸானது
சென்னை:
சென்னை முதல் மதுரை வரை இயக்கப்பட்டு வந்த கூடல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று முதல் குருவாயூர் வரைநீட்டிக்கப்பட்டுள்ளது. அதை ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி இன்று தொடங்கி வைத்தார்.
மதுரை வரை இயக்கப்பட்டு வந்த கூடல் எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை வரை நீட்டிக்குமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து நெல்லை வரை இந்த ரயில் நீட்டிக்கப்பட்டது.
இப்போது குருவாயூர் செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த ரயிலை அந்த ஊர் வரை நீட்டித்துள்ளது தென்னகரயில்வே.
இதையடுத்து ரயிலின் பெயரும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயிலை இன்று(சனிக்கிழமை) காலை 6.45 மணிக்கு அமைச்சர் ஏ.கே. மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தென் மாநிலங்களின் கோவில் நகரங்களை இணைக்கும் வகையில், திட்டமிட்டு வரும் ரயில்வேயின்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே குருவாயூருக்கு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படுவதாக அமைச்சர் மூர்த்திதெரிவித்தார்.
சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை,நெல்லை, நாகர்கோவில், கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழா வழியாக குருவாயூர் செல்கிறது.
நிகழ்ச்சியில் மாநில போக்குவரத்து அமைச்சர் ஆர்.விஸ்வநாதன், எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரிதிஇளம்வழுதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
-->