For Daily Alerts
Just In
இலவச மின்சாரத்துக்கு கட்டண வசூல் திட்டம்: அரசு ஒத்திவைப்பு
சென்னை:
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மாநில அரசுஇப்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சம் விவசாய பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால்மின்வாரியத்துக்கு ரூ. 500 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தமிழக அரசு முடிவுசெய்தது.
ஆனால், மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுவதாலும், நீர் இல்லாமல் விவசாயிகள் பெரும் பஞ்சத்தில் உள்ளதாலும் இலவசமின்சாரத்துக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு ஒத்தி வைத்துள்ளது.
பசியிலும் பட்டினியிலும் உள்ள விவசாயிகளிடம் போய் கட்டண வசூல் பில்லை நீட்டினால் நிலைமை வன்முறையாக மாறிவிடும்என்ற அச்சமே அரசை இந்த முடிவுக்குத் தள்ளியுள்ளது.
-->
Comments
Story first published: Saturday, January 18, 2003, 5:30 [IST]