ரஷ்ய விமானம் தாங்கி கப்பல்: இந்தியா வாங்குகிறது
மாஸ்கோ:
வரும் மார்ச் மாதத்தில் விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் கோர்ஸ்க்வோவை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கஉள்ளது.
இந்தப் போர்க் கப்பலை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே இரு நாடுகளும் பேச்சு நடத்தி வந்தன. ஆனால், விலை பேரம்படியவில்லை. இந் நிலையில் இப்போது மாஸ்கோ சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மார்ச் மாதத்தில் இக்கப்பலை இந்தியா வாங்கும் என்று அறிவித்துள்ளார்.
44.5 டன் எடை கொண்ட கிவி ரக விமானம் தாங்கிக் கப்பலான இத்துடன் டி.யு.22 எம்3 ரக குண்டு வீச்சு விமானங்கள், அணுசக்தியால் இயங்கும் அகுலா ரகத்தைச் சேர்ந்த இயங்கும் நீர் மூழ்கிகளையும் லீசுக்கு எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இதில் டி.யு.22 எம்3 ரக விமானத்தால் அணுகுண்டுகளையும் வீச முடியும்.
மேலும் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கடற்படைத தளத்தில் கட்டப்பட்டு வரும் மூன்று கிர்வாக் ரக போர்க் கப்பல்களும்வரும் ஏப்ரலில் இந்தியக் கடற்பயிைடம் ஒப்படைக்கப்பட்டுவிடும்.
இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்து வரும் கப்பல்களுக்கான ஏவுகணை பிரம்மோஸை மேலும் அதிக சக்திகொண்டதாக மேம்படுத்த கூடுதலாக நிதி ஒதுக்கப்படும். இது ஒரு சூப்பர்சானிக் கிரூயிஸ் ரக ஏவுகணையாகும்.
அதே போல நீர்மூழ்கிகளை ரிப்பேர் செய்ய வசதியாக விசாகப்பட்டிணத்தில் ஒரு கடற்படை ரிப்பேர் மையம் அமைக்கப்படும்.இது ரஷ்ய உதவியுடன் கட்டப்படும்.
இந்தியப் பெருங்கடலில் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியக் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும். 3 முதல் 4 மாதங்கள் வரைஇந்தப் பயிற்சி நடக்கும். அடுத்த சில மாதங்களில் இப் பயிற்சி தொடங்கும்.
சுகோய் ரக போர் விமானங்களை உரிய நேரத்தில் இந்தியாவிடம் ஒப்படைப்பதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்றார்பெர்னாண்டஸ்
-->












Click it and Unblock the Notifications