இன்று முதல் சென்னையில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர்
சென்னை:
சென்னை நகரில் இன்று முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் தொடங்கியது. பொதுமக்கள்மத்தியில் இதற்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
சென்னை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இப்போதுஇருப்பில் உள்ள நீர் ஜூன் மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும்.
எனவே, அரசு இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி விட்டது.
இதன் முதல் கட்டமாக குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதுவரைதினசரி குடிநீர் வினியோகம் இருந்து வந்தது. இனி (சனிக்கிழமை முதல்) ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவுள்ளது.
அதன்படி நாளை குடிநீர் வினியோகம் இருக்காது.
இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இப்போதே பல பகுதிகளில் தினசரி தண்ணீர் வருவதில்லை. இதனால் லாரிகளில் வரும் குடிநீரைத் தான் மக்கள்காசு கொடுத்து வாங்கி வருகின்றனர். இந் நிலையில் அதிகாரப்பூர்வமாகவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்வினியோகம் செய்தால் கடும் பாதிப்பு ஏற்படும் என்று மக்கள் புலம்புகிறார்கள்.
ஆனால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்தால்தான் ஜுன் வரையாவது தாக்குப் பிடிக்கமுடியும் என்று சென்னைக் குடிநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) கூறுகிறது.
குழாய்களில் தண்ணீர் வராத நாட்களில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளதுவாரியம் (இதற்கு எங்கிருந்து நீர் வரும் என்று தெரியவில்லை).
ஜூலையிலாவது மழை பெய்தால் தான் சென்னை தப்பும்.
-->