ஜெயலலிதாவை தரக் குறைவாக பேசிய வழக்கு: மதிமுக பிரமுகர் ஆஜர்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் மதிமுகவின் கொள்கைபரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
கடந்த மாதம் சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா குறித்துஅவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நாஞ்சில் சம்பத் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். விசாரணையை அடுத்த மாதம் 27ம் தேதிக்குஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்தில் நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறிக் கொண்டு நாஞ்சில் சம்பத்தின் வீட்டைஅதிகாரிகள் இடித்துத் தள்ளினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவை அவர் விமர்சித்துப் பேசியதால் தான் அவரை வீட்டை போலீசார் இடித்துத் தள்ளினர்.
-->


