காவல்துறைக்கு எதிராக திருமாவளவன் ஆர்ப்பாட்டம்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீஸார் பொய் வழக்குகள் போட்டு வருவதாகவும், தொண்டர்களைகுண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருவதாகவும் கூறி காவல்துறைக்கு எதிராக அக் கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது பேசிய திருமாவளவன், கட்டாய மதமாற்றத்தடைச் சட்டம், விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்துபோராடி வரும் விடுதலைச் சிறுத்தைகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அவர்கள் மீது பொய்யானவழக்குகளை ஜோடித்து வருகிறது அதிமுக அரசு.
குண்டர் சட்டம் போன்றவற்றை மிகத் தவறாகப் பயன்படுத்தி வரும் காவல்துறையினர் உடனே தங்களதுதவறுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆட்சியாளர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், போராட்டம் மாநில அளவில் வெடிக்கும்என்றும் அவர் எச்சரித்தார்.
-->












Click it and Unblock the Notifications